Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

செப்டம்பர் 24, 2020 07:33

திருப்பூர்: திருப்பூரில் தேசிய மக்கள் பேரியக்கம் நிறுவனத் தலைவர் நல்லினம் செல்வம் பிறந்தநாள் விழா முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
திருப்பூர் மாநகர் கொங்கனகிரி கோயிலில் தேசிய மக்கள் பேரியக்கம் நிறுவனத் தலைவர் நல்லினம் செல்வம் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் கொங்கு நகர் கொங்கனகிரி கோயிலில் நிறுவனர் நல்லினம் செல்வா நலம்பெற வேண்டி அபிஷேகம் நடைபெற்றது.

பிறகு திருப்பூர் மாநகரத்தில் உள்ள துப்புரவு தொழிலாளர்களுக்கு வேட்டி, சேலையும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அமராவதி பாளையத்தில் உள்ள மகாத்மா அனாதை இல்லம் குழந்தைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் சோப்பு, சீப்பு, பேஸ்ட், பிரஸ் அனைத்தும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாவட்ட பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட செயலாளர் ரமேஷ், இளைஞரணி செயலாளர் ஸ்ரீதர், மகளிர் அணி செயலாளர் பீனா, தொழில் பிரிவு செயலாளர் ஈஸ்வரன், விவசாய அணி செயலாளர் ரத்தினசாமி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்